
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுடனான தொடர்புகளை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை பாதையில் திறக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா இவ்வலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேற்படி அலுவலகம் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் அனைவருக்கும் பயனபடும் வகையில் இயங்கவுள்ளதாக இராணுவத் தளபதி அங்கு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் குடாநாட்டு மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைக்கூடியதாக இருக்கும் என்பதுடன் குடாநாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment