டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
மிசரி, வரணியைச் சேர்ந்த தவமொறிஸ் சுஜிந்தா (வயது-28) என்ற இளம் பெண் ணே உயிரிழந்தவராவார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரஸ்தாப யுவதி நேற்று முன்தினம் இரவு 8.45 யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத் தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
0 கருத்துரைகள்:
Post a Comment