பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் இரண்டு மோட் டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து கரவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் நெல்லியடியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கரவெட்டி நோக்கிச் சென்று கொண் டிருந்த துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழிய ரான ஒரு பிள்ளையின் தந்தையான ச.சந்திர குமார் (வயது-32) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இவருடன் பயணித்த போக்குவரத்துச் சபை ஊழியரான க.ரஜித்குமார் (வயது-27) என்பவர் மயக்கமுற்ற நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மற்றைய மோட்டார் சைக் கிளில் சென்ற தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த சபாரட்ணக் குருக்கள் ரஜேந்திரதேசி கர் (வயது-21) படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment