நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்க வேண்டும்

Monday, March 15, 2010

2010 ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவர். யார் தோற்பர் என்ற எதிர்வுகூறல்கள் எது வும் நமக்கு வேண்டியதில்லை. இப்போதெல்லாம் எவர் அமைதியாகத் தானுண்டு தன் பணியுண்டு என வாழ்கிறார்களோ அவர்களைத்தான் மக்கள் சமூகம் ஓரள வேனும் மதிக்க முற்படுகின்றது.

இந்நிலை யாழ்ப்பாணத்தில் மிக உச்சம் எனலாம். யாழ்ப்பாண மக்களைப் பற்றி அறிந்து கொள்வதெனில் அதற்கு ஒரு ஆயுள்காலம் போதாது. குறைந்தது ஏழு பிறப்பெடுத்தால் மட்டுமே யாழ்ப்பாண மக்களின் தன்மையைத் புரிந்து கொள்ள முடியும். சில வேளை ஏழாவது பிறப் பிலும் இது சாத்தியமாகாது போகலாம்.

இதற்கு நல்ல உதாரணம், நடைபெறப் போகும் பொதுத் தேர்தல். யாழ்.மாவட்ட நாடாளு மன்றத் தேர்தலில் ஏகப்பட்டவர்கள் அரசியல் கட்சி என்ற நிலையிலும், சுயேட்சைக் குழுக் கள் என்ற அடிப்படையிலும் போட்டியிடுகின் றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் போட்டியி டும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், சுயேட் சைக் குழுக்களும் தங்களுக்கு நாடாளுமன்ற ஆசனம் கிடைக்கும் என வெளிப்படையாகக் கூறிக் கொள்கின்றன. யாழ்ப்பாண மக்கள் யாரைக் கண்டாலும் உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று கூறிக் கொள்வது கூட இவ்வாறு அவர்கள் நம்புவதற்குக் காரணமாகலாம்.

யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாரையும் முகம் முறித்துப் பேச மாட் டார்கள். தங்கள் வீட்டிற்கு எந்த வேட்பாளர் வந்தாலும் வாருங்கள், இருங்கள், உங்களை சற்று முன்பும் நினைத்தோம், ஏகப்பட்டவர்கள் உங்களைத்தான் ஆதரிக்கின்றார்கள்.

உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி னால்தான் எங்கள் பிரச்சினை தீரும் என்று என்னுடைய கந்தோரிலும் கதைத்தார்கள். நூற்றுஐம்பது வாக்குகளைக் கூட பெற முடி யாத வேட்பாளருக்கு எங்கள் வாக்காளப் பெரு மக்கள் சொல்லும் கதைதான் இது. வாக்காளரும் வேட்பாளரும் சந்தித்தால் நடைபெறும் சம்பா ணையாக இது இருந் தால், வாக்காளரும், வாக்காளரும் சந்தித்தால் எப்படி கதைப்பார்கள் தெரியுமா?

போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் குறிப் பிட்டு இவரும் எலக் ன் கேட்கின்றார் என்று கூறி ஒரு சில விரசக் கதைகளும் சொல்லி சிரித்து மகிழ்வர்.எப்படி இருக்கின்றது நிலைமை? கற்பனை சாகரத்தில் வேட்பாளர்கள். வயிறு குலுங்கச் சிரிக்கின்றார்கள் வாக்காளர்கள்.

நீங்களும் கேட்டிருக்கலாமே என்று சிரிப்பின் உச்சத்தில் சொல்லி மகிழ்கின்றார்கள். இந்த மகிழ்வை மட்டுமே எங்கள் வேட்பாளர் களால் கொடுக்க முடியும். அதுபோதுமையா, தோற்றாலும் பரவாயில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment