தேர்தல் பிரசார நடவடிக்கைகளை யாழ்ப் பாணத்தில் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகி யோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு நாளை வரும் இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கான பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
யாழ்.வரும் அவர், தனது கட்சி வேட்பா ளர்களின் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.
0 கருத்துரைகள்:
Post a Comment