நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ். தென்மராட்சியில் வர்த்தகரின் மகனான மாணவன் கடத்தல்

Tuesday, March 16, 2010

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மீசாலை, மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர் ஒருவரின் மகனான மாணவன் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் கப்பமாக வழங்கப்படவேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.

வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment