நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீதித்தடைகள் நீக்கம்

Tuesday, March 16, 2010

யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை துதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் ]மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பிரதேச பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடும் நோக்கத்திலேயே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த இராணுவ பேச்சாளர் தற்போது பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:-

மிக நீண்ட காலமாகவே யாழ்.குடாநாட்டில் பாதுகாப்புக்கென வீதித் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் போன்றன அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த வீதித் தடைகள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் யாழ்ப்பாணத்தின் நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளது.

வீதித் தடைகளினால் இதுவரை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்ற பொதுமக்கள் இனி எவ்வித தடையுமின்றி வீதிகளில் போக்குவரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதித் தடைகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment