நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

பையில் கொண்டு சென்ற பணத்தை அறுத்தெடுத்தனர் கொள்ளையர்கள்!

Tuesday, March 16, 2010

வங்கியில் வைப்பிலிடுவதற்காகப் பை ஒன்றினுள் கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது

அளவெட்டியிலிருந்து யாழ். நோக்கி வானில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது;

தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்த ஒரு தொகை பணத்தை வங்கியில் வைப்பிலிடுவ தற்காக அளவெட்டியிலிருந்து வானில் பெண் ஒருவர் கொண்டு வந்துள்ளார்.

அதன்போது சனநெரிசலைப் பயன்படுத்திப் பணத்தினைக் கொண்டு வந்த பையினை அறுத்து அதிலிருந்த சுமர் 80 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ்.நகர்ப் பகுதியில் வானிலிருந்து இறங்கியபோதே தனது பணம் கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரிய வந்தமை தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது முறைப்பாட்டை ஏற்கப் பொலிஸார் மறுத்ததாகவும் கூறப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment