
யாழ்மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி அதன் தலைவர் சம்பந்தன் மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழில் போட்டியிடும் தமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதன் தலைவர் ஆர் சம்பந்தன் எதிர்வரும் 17 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் திருமலையில் பிரதான வேட்பாளராக போட்டியிடுவதுடன் யாழிலும் அவர் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment