வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள நிமலேந்திரா பட மாளிகையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பட மாளிகை சேதமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மின் கசிவு காரணமாக உடுப்பிட்டி நிமலேந்திரா பட மாளிகையில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் யாழ் மாநகரசபை தீயணைப்பு படையினர், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதன் போது யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment